sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கணவர் கழுத்தை நெரித்து கொன்ற மனைவி கைது

/

கணவர் கழுத்தை நெரித்து கொன்ற மனைவி கைது

கணவர் கழுத்தை நெரித்து கொன்ற மனைவி கைது

கணவர் கழுத்தை நெரித்து கொன்ற மனைவி கைது


ADDED : ஆக 27, 2024 11:36 PM

Google News

ADDED : ஆக 27, 2024 11:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர் : தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த ஏரியூர் அருகே கூர்க்கம்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 45, கல் உடைக்கும் தொழிலாளி. இவரது மனைவி நந்தினி, 35. இவர்களுக்கு, பிளஸ் 2 படிக்கும் மகளும், 10ம் வகுப்பு படிக்கும் மகனும் உள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ராயக்கோட்டை ஹவுசிங் போர்டில் குடும்பத்துடன் கோவிந்தராஜ் வசித்தார். நந்தினி, காபி ஷாப்பில் பணியாற்றி வந்தார்.

அவரது நடத்தையில் சந்தேகமடைந்து, அடித்து துன்புறுத்தி வந்ததோடு, வேலைக்கு செல்லாமல், குடிக்க பணம் கேட்டு, கோவிந்தராஜ் தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்தவர், மனைவியிடம் தகராறு செய்தார்.

நேற்று அதிகாலை, அக்கம் பக்கத்தினரை எழுப்பிய நந்தினி, கணவர் அசைவின்றி கிடப்பதாக தெரிவித்தார். ஓசூர் அரசு மருத்துவமனையில், அவரை பரிசோதனை செய்த டாக்டர், கோவிந்தராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

பிரேத பரிசோதனையில், கழுத்தை நெரித்து கோவிந்தராஜ் கொலை செய்யப்பட்டது தெரிந்தது.

ஓசூர் டவுன் போலீசார் நந்தினியிடம் நடத்திய விசாரணையில் கணவர் குடித்து விட்டு அடித்து துன்புறுத்தி வந்ததாகவும், நேற்று முன்தினம் இரவு குடி போதையில் அடித்ததால், கழுத்தை நெரித்து கொன்றதாகவும் தெரிவித்துள்ளார்.

போலீசார் அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us