sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 17, 2025 ,புரட்டாசி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கிருஷ்ணகிரியில் மாங்கனி கண்காட்சி நடக்குமா? 3வது முறையாக இடம் தேடும் மாவட்ட நிர்வாகம்

/

கிருஷ்ணகிரியில் மாங்கனி கண்காட்சி நடக்குமா? 3வது முறையாக இடம் தேடும் மாவட்ட நிர்வாகம்

கிருஷ்ணகிரியில் மாங்கனி கண்காட்சி நடக்குமா? 3வது முறையாக இடம் தேடும் மாவட்ட நிர்வாகம்

கிருஷ்ணகிரியில் மாங்கனி கண்காட்சி நடக்குமா? 3வது முறையாக இடம் தேடும் மாவட்ட நிர்வாகம்


ADDED : ஜூலை 14, 2024 03:47 AM

Google News

ADDED : ஜூலை 14, 2024 03:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் நடத்தப்படும், அகில இந்திய மாங்கனி கண்-காட்சிக்கு, 3வது முறையாக இடத்தை ஆய்வு செய்யும் பணியில் அலுவலர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், தற்போது கண்காட்சி நடத்தப்படுமா என்பதே கேள்விக்குறியாகி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அதிகளவில் மா சாகுபடி நடக்கிறது. மா விவசாயிகளை ஊக்குவிக்க கடந்த, 1992 முதல், அகில இந்-திய மாங்கனி கண்காட்சி நடத்தப்படுகிறது. மா விவசாயிகளுக்-காக தொடங்கப்பட்ட இக்கண்காட்சி, நாளடைவில் பொழுது-போக்கு அம்சத்திற்காக நடத்தப்படும் நிகழ்ச்சியாக மாறியது. ஆண்டுதோறும், கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடத்தப்பட்டு வந்த இந்த கண்காட்சிக்கு, கடந்த இரு ஆண்டுகளாக பிரச்னை இருந்தது. தற்போது, மா சீசனே முடிந்த நிலையில், மாங்கனி கண்காட்சி நடத்தவில்லை என, விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

நடப்பாண்டில் மாங்கனி கண்காட்சி நடத்த, கிருஷ்ணகிரி டோல்கேட் அருகிலுள்ள மைதானம் தேர்வு செய்து, அரங்குகள், கடைகள் அமைக்க இ-டெண்டர் விடப்பட்டது. அங்கு கண்-காட்சி நடத்துவதால், தேசிய நெடுஞ்சாலையை கடந்து, மக்கள் வருவது சிரமம் என்பதாலும், நகருக்குள் இல்லாத இடமாக, மாவட்ட நிர்வாகம் தேர்வு செய்துள்ளதாகவும், குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், மாங்கனி கண்காட்சி, அரசுக்கு சொந்த-மான இடத்தில் நடத்த, பா.ஜ., கட்சி மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தது.

கண்காட்சியில், ஆளுங்கட்சியினர் சம்பாதிக்கும் வகையில், டெண்டர் விடவேண்டும். இ-டெண்டர் வைத்தால், வெளியூர்கா-ரர்களுக்கு மட்டுமே லாபம் கிடைக்கும் என, தி.மு.க.,வினர் கூறு-வதால் அதிகாரிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.

மா விவசாயத்தை முற்றிலும் அழிக்கும் நடவடிக்கைகள் மட்-டுமே நடப்பதாகவும், முழுக்க முழுக்க பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் அரசியல்வாதிகள், அலுவலர்கள் செயல்படுவதா-கவும், விவசாயிகள் குற்றச்சாட்டியுள்ளனர்.






      Dinamalar
      Follow us