/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஸ்ராவன 3வது சனிக்கிழமையில் பெருமாள் கோவில்களில் வழிபாடு
/
ஸ்ராவன 3வது சனிக்கிழமையில் பெருமாள் கோவில்களில் வழிபாடு
ஸ்ராவன 3வது சனிக்கிழமையில் பெருமாள் கோவில்களில் வழிபாடு
ஸ்ராவன 3வது சனிக்கிழமையில் பெருமாள் கோவில்களில் வழிபாடு
ADDED : ஆக 25, 2024 12:59 AM
ஓசூர், ஆக. 25-
ஓசூரில் ஸ்ராவன மூன்றாவது சனிக்கிழமையையொட்டி, பெருமாள், ஆஞ்சநேயர் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது.
ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி தாலுகாவில், தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர். தமிழ் மாத புரட்டாசி போலவே, தெலுங்கு, கன்னட மக்கள் ஸ்ராவன மாதங்களில் அசைவம் சாப்பிடாமல், அம்மாதத்தில் வரும் அனைத்து சனிக்கிழமையும் பெருமாள், ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று, சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்தாண்டு, 3வது ஸ்ராவன சனிக்கிழமையான நேற்று காலை, பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
குறிப்பாக, சூளகிரி அடுத்த கோபசந்திரம் தட்சிண திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில், காலை, 6:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் செய்யப்பட்டது. கருட கம்பத்தின் முன் தேங்காய் உடைத்து, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பஸ்தலப்பள்ளி திம்மராய சுவாமி கோவிலில், காலை, 6:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. தமிழகம், கர்நாடகா, ஆந்திர மாநில பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
அதேபோல், குடிசெட்லு திம்மராய சுவாமி, ஓசூர் மலை மீதுள்ள வெங்கடரமண சுவாமி, ஓசூர் வேணுகோபால சுவாமி கோவில் மற்றும் ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.