sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

அரசு பள்ளியில் 5 நாளில் 108 மாணவர்கள் சேர்க்கை

/

அரசு பள்ளியில் 5 நாளில் 108 மாணவர்கள் சேர்க்கை

அரசு பள்ளியில் 5 நாளில் 108 மாணவர்கள் சேர்க்கை

அரசு பள்ளியில் 5 நாளில் 108 மாணவர்கள் சேர்க்கை


ADDED : ஜூன் 07, 2025 01:02 AM

Google News

ADDED : ஜூன் 07, 2025 01:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர், ஓசூரில், அரசு பள்ளி மூலம் நடத்தப்பட்ட விழிப்புணர்வால், 5 நாட்களில் மொத்தம், 108 மாணவ, மாணவியர் பள்ளியில்

சேர்ந்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பேடரப்பள்ளி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் கடந்த கல்வியாண்டில், 895 மாணவ, மாணவியர் கல்வி பயின்றனர். அதில், 8ம் வகுப்பு படித்த, 114 மாணவ, மாணவியர் படிப்பை முடித்து, உயர் கல்விக்காக மாற்று பள்ளிக்கு சென்றனர்.

அதேபோல், வடமாநில குழந்தைகள் மற்றும் உள்ளூர் மாணவர்கள் என மொத்தம், 25 பேரின் குழந்தைகள் வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்ததால், மாற்றுச்சான்றிதழை பெற்று, வேறு பள்ளிக்கு படிக்க சென்றனர். அதனால் நடப்பாண்டு, 200 பேரை பள்ளியில் சேர்க்க பள்ளி நிர்வாகம் முடிவு செய்து,

பேடரப்பள்ளி பகுதியில் அரசு கொடுக்கும் நலத்திட்ட உதவிகள் குறித்து எடுத்து கூறி விழிப்புணர்வு

ஏற்படுத்தியது.

அதன் விளைவாக பள்ளி திறந்து நேற்று வரை மட்டும் கடந்த, 5 நாட்களில் ஒன்றாம் வகுப்பிற்கு, 43 பேர், 2ம் வகுப்பிற்கு, 12 பேர், 6ம் வகுப்பிற்கு, 27 பேர், மற்ற வகுப்புகளுக்கு, 26 பேர் என மொத்தம், 108 மாணவ,

மாணவியர் பேடரப்பள்ளி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, அரசின் விலையில்லா பாடப்புத்தகம், நோட்டு புத்தகம், பேனா, பென்சில் மற்றும் கல்வி உபகரணங்களை, பள்ளி தலைமையாசிரியர் பொன்நாகேஷ் நேற்று

வழங்கினார்.

ஆசிரியைகள் எப்சி ஜாய்ஸ் மேரி மற்றும் அபிராமி

உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us