நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அடுத்த கே.பூசாரிப்பட்டியை சேர்ந்தவர் கன்னியப்பன், 55, விவசாயி. இவர், தான் வளர்க்கும் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டபின் வீட்டருகே உள்ள ஆட்டு கொட்டகையில் அடைத்து வைப்பது வழக்கம்.
நேற்று முன்தினம் வழக்கம்போல் ஆடுகளை மேய்த்துவிட்டு கொட்டகையில் அடைத்து சென்றார். நேற்று காலை பார்க்கும்போது கொட்டகையில் இருந்த, 11 ஆடுகள் திருடப்பட்டிருந்தன. அவர் புகார்படி மகாராஜகடை போலீசார் விசாரிக்கின்றனர்.