நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, பர்கூர் அடுத்த பூமாலை நகரில் நேற்று முன்தினம் அப்பகுதியில் நின்ற ஒரு லாரியை பர்கூர் போலீசார் சோதனையிட்டனர். அதில், 2 யூனிட் மண் கடத்த முயன்றது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்தனர்.
* தொட்டமெட்டரை பஸ் ஸ்டாப் அருகே, நேற்று முன்தினம், அப்பகுதி வி.ஏ.ஓ., செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள் மினி டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்த போது, உரிய அனுமதி சீட்டு இல்லாமல், ராயக்கோட்டைக்கு, 2 யூனிட் எம்.சாண்ட் ஏற்றி செல்வது தெரிந்தது. லாரியை உத்தனப்பள்ளி போலீசில் ஒப்படைத்தனர். புகார் படி, போலீசார் விசாரிக்கின்றனர்.

