sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க லஞ்சம் உதவி பொறியாளர் உட்பட 2 பேர் கைது

/

வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க லஞ்சம் உதவி பொறியாளர் உட்பட 2 பேர் கைது

வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க லஞ்சம் உதவி பொறியாளர் உட்பட 2 பேர் கைது

வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க லஞ்சம் உதவி பொறியாளர் உட்பட 2 பேர் கைது


ADDED : பிப் 15, 2025 07:04 PM

Google News

ADDED : பிப் 15, 2025 07:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன், 38. பெங்களூரு தனியார் மருத்துவமனையில் ஊழியராக உள்ளார்; ஓசூர் பேகேப்பள்ளி பிருந்தாவன் கார்டன் பகுதியில் சொந்த வீடு கட்டி வருகிறார்; இதற்கு மின் இணைப்பு கேட்டு, சிப்காட் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.

அதை பரிசீலனை செய்த மின்வாரிய உதவி பொறியாளர் சிவகுரு, 43, கமர்சியல் இன்ஸ்பெக்டர் பிரபாகரன், 45, ஆகியோர், புதிய வீட்டிற்கு சென்று பார்த்து விட்டு, புதிய இணைப்பு வழங்க, 35,000 ரூபாய் லஞ்சம் வழங்க வேண்டும் என கேட்டனர். முதற்கட்டமாக, 5,000 ரூபாயை ராஜேந்திரன் வழங்கியுள்ளார்.

மீதமுள்ள பணத்தை வழங்க விரும்பாத அவர், மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். டி.எஸ்.பி., நாகராஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயனம் தடவிய, 30,000 ரூபாயை, ராஜேந்திரனிடம் கொடுத்தனுப்பினர். அதை எடுத்து கொண்டு சிப்காட் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்ற அவர், உதவி பொறியாளர் சிவகுரு மற்றும் கமர்சியல் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் ஆகியோரிடம் பணத்தை வழங்கினார்.

அதை வாங்கி கொண்ட அவர்கள், இந்த தொகை போதாது என்றும், மொத்தம், 2 லட்சம் ரூபாய் வேண்டும் என கேட்டுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், இருவரையும் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us