/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சென்டர் மீடியன் மீது பைக் மோதி கட்டட தொழிலாளர் 2 பேர் பலி
/
சென்டர் மீடியன் மீது பைக் மோதி கட்டட தொழிலாளர் 2 பேர் பலி
சென்டர் மீடியன் மீது பைக் மோதி கட்டட தொழிலாளர் 2 பேர் பலி
சென்டர் மீடியன் மீது பைக் மோதி கட்டட தொழிலாளர் 2 பேர் பலி
ADDED : செப் 21, 2024 07:35 AM
கரூர்: கரூர் அருகே சென்டர் மீடியன் மீது பைக் மோதிய விபத்தில் வட மாநில தொழிலாளர்கள், இரண்டு பேர் உயிரிழந்தனர்.
பீகார் மாநிலம், மசூர் ஜாக் பகுதியை சேர்ந்தவர்கள் கோபி கிருஷ்ணன், 28; சந்தோஷ் குமார், 36; இவர்கள், இருவரும் கரூரில் தங்கி கட்டட வேலை செய்து வந்தனர். நேற்று முன்-தினம் இரவு கோபி கிருஷ்ணன், ஹீரோ ஹங்க் பைக்கில், சந்தோஷ் குமாருடன், கரூர்-திருச்சி தேசிய
நெடுஞ் சாலை கோடங்கிப்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தனர். இருவரும் ெஹல்மெட் அணிய வில்லை.பைக்கை கோபி கிருஷ்ணன் ஓட்டியுள்ளார். அப்போது, பைக் திடீ-ரென நிலை தடுமாறி சென்டர் மீடியனில் மோதியது. அதில், முகத்தில்
படுகாயம் அடைந்த கோபி கிருஷ்ணனும், சந்தோஷ் குமாரும், கரூர் அரசு மருத் துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில்
உயிரிழந்தனர். தான்தோன்றிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.