ADDED : நவ 23, 2025 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி, தர்மபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரம் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., ராஜேஷ் நேற்று முன்தினம் இரவு, 7:30 மணிக்கு முருக்கம்பட்டி- கன்னிப்பட்டி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டார்.
அப்போது, அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தியபோது, அதிலிருந்த டிரைவர் தப்பி சென்றார். வாகனத்தை சோதனை செய்ததில், கிரவல் மண் கடத்தி வந்தது தெரியவந்தது. வாகனத்தை பறிமுதல் செய்தார். அதேபோல், இரவு, 8:00 மணிக்கு அதே பகுதி வழியாக, கடத்தி வரப்பட்ட கிரவல் மண்ணுடன், மற்றொரு டிப்பர் லாரியை பறிமுதல் செய்தார்.

