/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வெவ்வேறு சம்பவத்தில் சிறுமி உட்பட 2 பேர் மாயம்
/
வெவ்வேறு சம்பவத்தில் சிறுமி உட்பட 2 பேர் மாயம்
ADDED : மார் 29, 2025 08:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை சேர்ந்த, 18 வயது சிறுமி தனியார் கல்லுாரியில் பி.காம்., முதலாமாண்டு படிக்கிறார். கடந்த, 25 காலை, 11:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்ற மாணவி திரும்பி வரவில்லை. அவரது தாய், ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார்.
ஓசூர் ஆவலப்பள்ளி சாலை, அன்பு நகரை சேர்ந்தவர் மணிகண்டன், 36. தனியார் எலக்ட்ரிக்கல் கடையில் வேலை செய்கிறார். கடந்த, 26 மதியம், 2:00 மணிக்கு கடையில் இருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரது மனைவி பரிமளா, 28, கொடுத்த புகார்படி, ஓசூர் டவுன் போலீசார் தேடி வருகின்றனர்.