/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கல், மண் கடத்தல் 2 லாரிகள் பறிமுதல்
/
கல், மண் கடத்தல் 2 லாரிகள் பறிமுதல்
ADDED : ஜூலை 03, 2025 01:09 AM
ஓசூர், ஓசூர், ஹட்கோ ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, எஸ்.ஐ., செல்வராஜ் மற்றும் போலீசார், பஸ்தி இந்திரா நகர் அருகே, நேற்று முன்தினம் வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த லாரியில் சோதனை செய்தபோது, அனுமதி சீட்டு இல்லாமல், ஆவலப்பள்ளியில் இருந்து பஸ்திக்கு, 2 யூனிட் மண்ணை கொண்டு செல்வது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடிய டிரைவர் மற்றும் உரிமையாளரை தேடி வருகின்றனர்.
* கிருஷ்ணகிரி-யில், திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில், மத்துார் அடுத்த, கொடமாண்டப்பட்டி பிரிவு சாலையில் அனுமதியின்றி, 2 யூனிட் ஜல்லி ஏற்றிச்சென்ற டிம்பர் லாரியை, போச்சம்பள்ளி தாசில்தார் சத்யா பறிமுதல் செய்து, மத்துார் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் டிம்பர் லாரி ஓனர் மற்றும் டிரைவரை தேடி வருகின்றனர்.