ADDED : ஜூலை 08, 2026 04:24 AM

அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி
மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் குமரேசன் மற்றும் அலுவலர்கள்
பர்கூர் அடுத்த ஒப்பதவாடி அருகே ரோந்து சென்றனர்.
அங்கு செந்தில்குமார் என்பவர் நிலத்தில் சிலர், பொக்லைன் உதவியுடன்,
லாரியில் மண் திருட முயன்றனர். அதிகாரிகளை கண்டவுடன் அவர்கள் தப்பி
ஓடி விட்டனர். அதிகாரிகள் தகவல் படி, பர்கூர் போலீசார் லாரி மற்றும்
பொக்லைன் வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் லாரி உரிமையாளரான
திருப்பத்துார் மாவட்டம், சின்னகவுண்டனுாரை சேர்ந்த சூர்யா, 26,
என்பவர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
