sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கி.கிரி அரசு கல்லுாரியில் 21வது பட்டமளிப்பு

/

கி.கிரி அரசு கல்லுாரியில் 21வது பட்டமளிப்பு

கி.கிரி அரசு கல்லுாரியில் 21வது பட்டமளிப்பு

கி.கிரி அரசு கல்லுாரியில் 21வது பட்டமளிப்பு


ADDED : ஆக 31, 2025 04:03 AM

Google News

ADDED : ஆக 31, 2025 04:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லுாரியில் நேற்று, 21வது பட்டமளிப்பு விழா நடந்தது

கல்லுாரி முதல்வர் அனுராதா வரவேற்று, பட்டமளிப்பு விழா அறிக்கை வாசித்தார். தமிழ்நாடு கல்லுாரி கல்வி இணை இயக்குனர் (திட்டம் மற்றும் வளர்ச்சி) சிந்தியா செல்வி, மாணவ, மாணவியருக்கு பட்டங்கள் வழங்கி, அவ்வையார், பாரதியார் கவிதைகளை மேற்கோள் காட்டியும், மாணவர்கள் பெறும் பட்டங்கள் மூலம், முழுமையான குறிக்கோள் கொண்டு வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என, பேசினார்.

2023-24ம் ஆண்டில் முதுகலை பொருளியல் துறையை சேர்ந்த மாணவர் மணிவண்ணன், பெரியார் பல்கலைக்கழக தேர்வில் தங்கப்பதக்கம் பெற்று முதலிடம் பிடித்தார். ஜெகன், 2வது இடமும், விக்னேஷ் 3வது இடத்தையும் பெற்றனர். அதேபோல, வரலாற்று துறை முதுகலை மாணவி அஸ்வினி, 10வது இடம் பெற்றார். அவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

விழாவில், 2021-24 மற்றும் 2022-24ல் (இளநிலை மற்றும் முதுநிலை கல்வி ஆண்டு) பயின்ற மாணவ, மாணவியர் என மொத்தம், 710 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

ஆங்கில துணைத்தலைவர் சரிதா, அனைத்துத் துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ரவி, வெங்கடேசன், பாலாஜி, வெங்கடாசலம் மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us