ADDED : மே 16, 2025 01:37 AM
கெலமங்கலம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், வெவ்வேறு இடங்களில், மூதாட்டி உட்பட, 3 பேர் மாயமாகி உள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ராஜி தெருவை சேர்ந்தவர் முனுசாமி மனைவி ராஜம்மா, 80. கடந்த, 13ம் தேதி, ஓசூர் ராம்நகர் கோட்டை மாரியம்மன் கோவில் மாவிளக்கு திருவிழாவை காண கோவிலுக்கு சென்றவர் திரும்பவில்லை. அவரது மகன் முருகேசன், 41, புகார் படி, ஓசூர் டவுன் போலீசார் தேடி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை தாலுகாவை சேர்ந்தவர், 17 வயது சிறுமி. கடந்த, 12ம் தேதி மாலை, 4:00 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் மாயமானார்.
அவரது தந்தை தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் கொடுத்த புகாரில், கெலமங்கலம் அருகே பிதிரெட்டியை சேர்ந்த சேமசேகர் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.
கெலமங்கலம் அருகே அனுசோனையை சேர்ந்தவர் வெங்கடேஷ் மனைவி ஜோதிகா, 22. பி.செட்டிப்பள்ளியிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த, 12ல் மதியம், 2:30 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் மாயமானார்.
அவரது கணவர் கெலமங்கலம் போலீசில் கொடுத்த புகாரில், மனைவி பணியாற்றும் அதே நிறுவனத்தில் பணி செய்யும், நாமக்கல்லை சேர்ந்த சசி என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.