/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அடுத்தடுத்து 12 வாகனங்கள் மோதி தந்தை, மகன் உட்பட 3 பேர் பலி
/
அடுத்தடுத்து 12 வாகனங்கள் மோதி தந்தை, மகன் உட்பட 3 பேர் பலி
அடுத்தடுத்து 12 வாகனங்கள் மோதி தந்தை, மகன் உட்பட 3 பேர் பலி
அடுத்தடுத்து 12 வாகனங்கள் மோதி தந்தை, மகன் உட்பட 3 பேர் பலி
ADDED : ஜூலை 21, 2025 01:43 AM

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து மோதிக்கொண்ட வாகனங்களால், தந்தை, மகன் உட்பட மூன்று பேர் பலியாகினர். ஏழு பேர் படுகாயம் அடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், குருபரப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகில் நேற்று மாலை, 4:30 மணிக்கு, லாரி, கார், பைக், பிக்கப் வாகனம் என, 12 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்டன.
இதனால் அவ்வழியில் போக்குவரத்து பாதித்தது. வாகனங்களில் சென்றவர்கள், விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் இறங்கினர். குருபரப்பள்ளி போலீசாரும் விரைந்தனர்.
விபத்தில், பைக்கில் சென்ற பர்கூர், தபால்மேடு பகுதி எலக்ட்ரீஷியன் அன்வர்பாஷா, 30, அவரது மகன் அமீம், 7, கிருஷ்ணகிரி, பெரியார் நகர் பர்கத்துல்லா, 65, ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மேலும் ஏழு பேர் படுகாயமடைந்தனர். அனைவரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதனால் ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கலெக்டர் தினேஷ்குமார், எஸ்.பி., தங்கதுரை சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.