/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
காரில் கடத்திய 333 கிலோ குட்கா பறிமுதல்
/
காரில் கடத்திய 333 கிலோ குட்கா பறிமுதல்
ADDED : செப் 28, 2025 02:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி;குருபரப்பள்ளி போலீசார், நேற்று முன்தினம் போலுப்பள்ளி அருகே ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பகுதியில் கேட்பாரற்று நின்ற குஜராத் மாநில பதிவெண் கொண்டமஹிந்திரா எக்ஸ்யூவி காரை சோதனையிட்டதில், 333 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தன. அதன் மதிப்பு, 1.74 லட்சம் ரூபாய் ஆகும். புகையிலை பொருட்களுடன் காரையும் பறிமுதல் செய்து, போலீசார் விசாரிக்கின்றனர்.