ADDED : ஜூலை 16, 2026 01:44 AM
அ நிறம் | அளவு
சூளகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே பெரிய தின்னுார் கிரா-மத்தை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா, 50. கூலித்தொழிலாளி; இவ-ருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் கடந்த, 12ம் தேதி மதியம், 3:30 மணிக்கு வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த-வர்கள், கிருஷ்ணப்பாவை கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதில் காயமடைந்த அவர், சேலம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக கிருஷ்ணப்பா மகள் சுஜாதா, 30, புகார்படி, பெரிய தின்னுாரை சேர்ந்த நாகராஜ், 29, சந்தோஷ், 22, சின்ன தின்னுாரை சேர்ந்த முருகன், 28, வெங்கடேஷ், 31, ஆகிய, 4 பேரை நேற்று முன்-தினம் சூளகிரி போலீசார் கைது செய்தனர்.
