sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தம்பதியிடம் நகை பறித்த தி.மு.க.,வினர் 4 பேர் கைது

/

தம்பதியிடம் நகை பறித்த தி.மு.க.,வினர் 4 பேர் கைது

தம்பதியிடம் நகை பறித்த தி.மு.க.,வினர் 4 பேர் கைது

தம்பதியிடம் நகை பறித்த தி.மு.க.,வினர் 4 பேர் கைது


ADDED : மே 12, 2025 12:47 AM

Google News

ADDED : மே 12, 2025 12:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காவேரிப்பட்டணம் : கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை சேர்ந்தவர் அல்லிமுத்து, 35; நகை வியாபாரி. தன்னிடம் உள்ள நகைகளை வங்கியில் அடமானம் வைப்பதற்காக, நேற்று முன்தினம் மனைவியுடன் ஸ்கூட்டரில் கிருஷ்ணகிரி சென்றார்.

ராயக்கோட்டை மேம்பாலம் அருகில், தர்மபுரி - கிருஷ்ணகிரி சாலையில் வந்தபோது, பின்னால் வேகமாக இரு பைக்குகளில் வந்த நால்வர், அல்லிமுத்து ஸ்கூட்டர் மீது மோதினர். பையில் அவர் வைத்திருந்த, 9.5 சவரன் நகைகளை பறித்துச் சென்றனர்.

இதுகுறித்த புகாரில் போலீசார் விசாரித்தனர். நகை பறிப்பில் ஈடுபட்டது, கிருஷ்ணகிரி, கணபதி நகரை சேர்ந்த மதன், 21, கிட்டம்பட்டி சக்திவேல், 29, பாப்பாரப்பட்டி சந்தோஷ்குமார், 28, அவதானப்பட்டி ராஜ்குமார், 28, என, தெரிந்தது.

அனைவரும் தி.மு.க.,வில் உறுப்பினர்களாக உள்ளனர். ராஜ்குமார் கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றிய தி.மு.க.,வில் பொறுப்பில் உள்ளார். கிருஷ்ணகிரி தாலுகா போலீசார், நால்வரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us