sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஓசூரில் 4 பேர் பலியான விபத்து; 4 டிரைவர்கள் மீது வழக்கு பதிவு

/

ஓசூரில் 4 பேர் பலியான விபத்து; 4 டிரைவர்கள் மீது வழக்கு பதிவு

ஓசூரில் 4 பேர் பலியான விபத்து; 4 டிரைவர்கள் மீது வழக்கு பதிவு

ஓசூரில் 4 பேர் பலியான விபத்து; 4 டிரைவர்கள் மீது வழக்கு பதிவு


ADDED : அக் 13, 2025 11:33 PM

Google News

ADDED : அக் 13, 2025 11:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்; ஓசூர் அருகே விபத்தில் நான்கு சாப்ட்வேர் இன்ஜினியர்கள் பலியான வழக்கில், மேலும் நான்கு வாகன டிரைவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பேரண்டப்பள்ளி வனப்பகுதியில், பெங்களூரு - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், நேற்று முன்தினம் அதிகாலை அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில், காரில் பயணித்த சேலம், ஈரோடு ஆகிய பகுதிகளை சேர்ந்த நான்கு சாப்ட்வேர் இன்ஜினியர்கள் லாரி மோதி பலியாகினர்.

இந்த நால்வர் இறப்புக்கு காரணமான லாரி டிரைவர், கர்நாடகா மாநிலம், சித்ரதுர்காவை சேர்ந்த லாரி டிரைவர் கிரிஷா, 33, நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். மேலும், விபத்துக்கு காரணமான, கிருஷ்ணகிரி அருகே சின்னபனமுட்லுவை சேர்ந்த டாரஸ் லாரி டிரைவர் லட்சுமணன், 26, நெல்லுாரை சேர்ந்த லாரி டிரைவர் அக்பர் அலி லஸ்கர், 33, மேற்கு வங்கத்தை சேர்ந்த டாடா ஹாரியார் கார் டிரைவர் அப்ஜத் தெப்ராய், 35, ஆந்திராவை சேர்ந்த பிக்கப் வாகன டிரைவர் பிரவீன்குமார், 25, ஆகிய, நான்கு பேர் மீதும் ஹட்கோ போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us