sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வெவ்வேறு இடங்களில் சிறுமி உட்பட 4 பேர் மாயம்

/

வெவ்வேறு இடங்களில் சிறுமி உட்பட 4 பேர் மாயம்

வெவ்வேறு இடங்களில் சிறுமி உட்பட 4 பேர் மாயம்

வெவ்வேறு இடங்களில் சிறுமி உட்பட 4 பேர் மாயம்


ADDED : ஜூலை 23, 2025 01:52 AM

Google News

ADDED : ஜூலை 23, 2025 01:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், சிறுமி உட்பட, 4 பேர் மாயமாகினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த பாகலுார் அருகே மேல் சூடாபுரத்தை சேர்ந்தவர் பிரகாஷ், 38. இவரது மனைவி சரஸ்வதி, 25. இவர்களுக்கு, 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த, 20ம் தேதி மதியம், 3:00 மணிக்கு, தன் மகளுடன் வீட்டிலிருந்து வெளியே சென்ற சரஸ்வதி வீடு திரும்பவில்லை. கணவர் புகார் படி, பாகலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

தேன்கனிக்கோட்டையை சேர்ந்தவர், 16 வயது சிறுமி. கடந்த, 20ம் தேதி மதியம், 3:00 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது தந்தை தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் கொடுத்த புகாரில், தேன்கனிக்கோட்டை அருகே புருனஹள்ளியை சேர்ந்த நர்சரி பண்ணை நடத்தி வரும் கிரீஷ், 26, என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.

தளி அருகே சி.கே., அக்ரஹாரத்தை சேர்ந்தவர் சீனிவாசன், 44. மதகொண்டப்பள்ளியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். கடந்த, 17ம் தேதி காலை, 6:30 மணிக்கு வீட்டிலிருந்து கடைக்கு பைக்கில் புறப்பட்டு சென்றவர், கடையை சென்றடையவில்லை. அவரது மனைவி ரவிகலா, 41, புகார் படி, தளி போலீசார், சீனிவாசனை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us