/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிரானைட், மண் கடத்திய 4 லாரிகள் பறிமுதல்
/
கிரானைட், மண் கடத்திய 4 லாரிகள் பறிமுதல்
ADDED : டிச 03, 2024 01:17 AM
கிரானைட், மண் கடத்திய
4 லாரிகள் பறிமுதல்
ஓசூர், டிச. 2-
சூளகிரி ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ., தவமணி மற்றும் போலீசார், சூளகிரியில் உள்ள பழைய கிருஷ்ணகிரி சாலையில் ரோந்து சென்றனர். அவ்வழியாக வந்த, 3 டாரஸ் லாரிகளை நிறுத்தி சோதனை செய்த போது தலா, 60,000 ரூபாய் மதிப்புள்ள, கிரானைட் கல் கடத்தியது தெரிந்தது. இதனால், கிரானைட் கற்களுடன், 18 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 3 லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்து, தப்பிய லாரி டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்களை தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை தாசில்தார் கோகுலகண்ணன் மற்றும் போலீசார், ஓசூர் - தேன்கனிக்கோட்டை சாலையில், நாகொண்டப்பள்ளி அருகே வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த டிப்பர் லாரியில் சோதனை செய்த போது, 5 யூனிட் மண் கடத்தியது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், மத்திகிரி ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.