/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
துாய பாத்திமா அன்னை திருத்தல 52வது ஆண்டு தேர்த்திருவிழா
/
துாய பாத்திமா அன்னை திருத்தல 52வது ஆண்டு தேர்த்திருவிழா
துாய பாத்திமா அன்னை திருத்தல 52வது ஆண்டு தேர்த்திருவிழா
துாய பாத்திமா அன்னை திருத்தல 52வது ஆண்டு தேர்த்திருவிழா
ADDED : ஜூலை 15, 2025 01:12 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி துாய பாத்திமா அன்னை திருத்தலத்தின், 52வது ஆண்டு திருத்தல தேர்த்திருவிழா கடந்த ஜூலை, 5ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது.
அன்று முதல் நாள் தோறும் ஆலயத்தில், பங்கு தந்தையர்கள் தலைமையில் திருப்பலி பூஜை நடந்தது. மாலையில் தேவாலயத்தை சுற்றி சிறிய தேர்பவனி நடந்து வந்தன. தேர்த்திருவிழாவின் கடைசி நாளான நேற்று முன்தினம் காலை, 8:00 மணிக்கு, தர்மபுரி மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில், ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடந்தது.
மாலை, 7:00 மணிக்கு, வண்ண விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரை, தர்மபுரி மறைமாவட்ட ஆவண காப்பாளர் சூசைராஜ் துவக்கி வைத்தார். தேர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டைய மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்தும் ஏராளமானோர், தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றியதற்காக திருத்தேரின் மீது உப்பு, மிளகு மற்றும் மலர்களை துாவி நேர்த்திக்கடன் செலுத்தினர்.