ADDED : டிச 23, 2025 05:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் மற்றும் சூளகிரி, கொட்டாயூர், பெத்தசிகலரப்பள்ளி, உத்தனப்பள்ளி ஆகிய பகுதிகளுக்கு, 6 'மகளிர் விடியல் பஸ்கள்' சேவை துவக்க விழா நேற்று நடந்தது. ஓசூர் மாநகர மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா முன்னிலை வகித்தனர்.
ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் தலைமை வகித்து, 6 பஸ்களின் சேவையை கொடியசைத்து துவக்கி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். மேலும், பஸ்சில் சிறிது துாரம் பயணம் செய்தார். கவுன்சிலர் வெங்கடேஷ், தி.மு.க., இலக்கிய அணி அமைப்பாளர் சக்திவேல், பகுதி செயலாளர் ராமு உட்பட பலர் பங்கேற்றனர்.

