/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
எம்.ஜி.ஆர்., நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு
/
எம்.ஜி.ஆர்., நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு
எம்.ஜி.ஆர்., நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு
எம்.ஜி.ஆர்., நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு
ADDED : டிச 23, 2025 05:53 AM
கிருஷ்ணகிரி: எம்.ஜி.ஆரின், 38ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சிகளில், அ.தி.மு.க.,வினர் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என, கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அ.தி.மு.க., நிறுவனர், எம்.ஜி.ஆரின்., 38ம் ஆண்டு நினைவு நாள் நாளை (24ம் தேதி), அனுசரிக்கப்படுகிறது. அவரது நினைவு நாளை ஒட்டி, அ.தி.மு.க., சார்பில் அனைத்து பகுதிகளிலும் உள்ள, எம்.ஜி.ஆர்., சிலை மற்றும் படங்களுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்த வேண்டும். நிகழ்ச்சிகளில் மாவட்டத்தில் உள்ள முன்னாள், இன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகள், கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

