/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பள்ளி ஹெச்.எம்., வீட்டில் 6 பவுன் நகைகள் திருட்டு
/
பள்ளி ஹெச்.எம்., வீட்டில் 6 பவுன் நகைகள் திருட்டு
ADDED : டிச 01, 2024 01:17 AM
பள்ளி ஹெச்.எம்., வீட்டில்
6 பவுன் நகைகள் திருட்டு
ஓசூர், டிச. 1-
தேன்கனிக்கோட்டை ஜெய் தெருவை சேர்ந்தவர் சிக்கண்ணா, 50. ஜெக்கேரி அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியராக உள்ளார்; கடந்த, 27 அதிகாலை, 5:00 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு, குடும்பத்தினருடன் சூளகிரியிலுள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். நேற்று முன்தினம் காலை, 7:30 மணிக்கு திரும்பி வந்தபோது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சியடைந்த சிக்கண்ணா மற்றும் அவரது குடும்பத்தினர், வீட்டிற்குள் சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு, உள்ளேயிருந்த, 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 6 பவுன் நகை திருடு போனது தெரிந்தது. புகார் படி, தேன்கனிக்கோட்டை போலீசார், அப்பகுதி, 'சிசிடிவி' கேமரா காட்சிகளை கைப்பற்றி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.