ADDED : நவ 03, 2024 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, நவ. 3-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கிறதா என, அந்தந்த பகுதி போலீசார் சோதனை நடத்தினர். அதன்படி மத்திகிரி, ஓசூர், பாகலுார், பேரிகை, பாரூர், நாகரசம்பட்டி, போச்சம்பள்ளி, உத்தனப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் பெட்டி கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற, 9 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து, 1,650 மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.