/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
புளிய மரக்கிளை விழுந்து மின் கம்பம் சேதம்
/
புளிய மரக்கிளை விழுந்து மின் கம்பம் சேதம்
ADDED : நவ 30, 2024 02:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே திருப்பத்தூர் சாலை, சாந்த காளிமயம்மன் கோவில் அருகில் நேற்று மாலை, 6:00 மணியளவில் சாலை-யோரம் உள்ள புளியமரம் ஒன்றின் கிளை முறிந்து மின்கம்பம் மீது விழுந்தது.
கம்பம் உடைந்ததில், மின்கம்பிகள் அறுந்து சாலையில் விழுந்தன. அதிர்ஷ்டவசமாக அப்போது யாரும் சாலையில் செல்லவில்லை. தகவலறிந்து வந்த மின்துறை ஊழி-யர்கள் மரத்தை அப்புறப்படுத்தி, உடனடியாக மின் இணைப்பை சீர் செய்தனர். புளிய-மரம் விழுந்து மின்கம்பிகள் சாலையில் விழுந்ததால், அப்பகு-தியில் சிறிது நேரம்
போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

