sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

நவராத்திரி விழா நிறைவு 15 தேர்கள் ஒன்று கூடல்

/

நவராத்திரி விழா நிறைவு 15 தேர்கள் ஒன்று கூடல்

நவராத்திரி விழா நிறைவு 15 தேர்கள் ஒன்று கூடல்

நவராத்திரி விழா நிறைவு 15 தேர்கள் ஒன்று கூடல்


ADDED : அக் 14, 2024 06:35 AM

Google News

ADDED : அக் 14, 2024 06:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், நவராத்திரி விழா நிறைவையொட்டி, 15 கோவில் தேர்கள் ஒன்று கூடியதை, பக்தர்கள் வழிபட்டனர்.

கிருஷ்ணகிரியில், நவராத்திரி விழாவையொட்டி கோவில்களில் கொலு பொம்மைகள் வைத்து கொண்டாப்பட்டன. அதன் நிறைவு விழாவையொட்டி, நேற்று முன்தினம் இரவு பழைய-பேட்டையிலுள்ள லட்சுமி நாராயண சுவாமி கோவில், சீனிவாச பெருமாள் கோவில், தஞ்சாவூர் மாரியம்மன் கோவில், அங்கா-ளம்மன் கோவில், தர்மராஜா கோவில் தெரு முத்துமாரியம்மன் கோவில், டி.பி., ரோடு பட்டாளம்மன் கோவில், கவீஸ்வரர் கோவில், ராமர் கோவில், காட்டிநாயனப்பள்ளி முருகர் கோவில், புதுப்பேட்டை கிருஷ்ணன் கோவில், சோமேஸ்வரர் கோவில், படவட்டம்மாள் கோவில், காமாட்சியம்மன் கோவில், ஞான விநாயகர் கோவில், கல்கத்தா காளிக்கோவில் என, 15 கோவில்-களில் இருந்து, உற்சவமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் தேர் பவனி வந்தன. இரவு முழுவதும் நகரில் வலம் வந்த தேர்கள் நேற்று காலை, 7:00 மணிக்கு, பழையப்பேட்டை காந்திசிலை அருகில் ஒரே இடத்தில் நிறுத்தி வைத்து, வன்னி மரம் வெட்டும் நிகழ்ச்சி நடந்-தது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்து பக்தர்கள் வழி-பட்டனர். இதில், கிருஷ்ணகிரி மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். வன்னி மரத்தின் இலைகளை வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும் என்ற ஐதீகத்தினால், வன்னி இலைகளை பெற பக்-தர்கள் கூட்டம் அலைமோதியது.






      Dinamalar
      Follow us