/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரி மலையில் இருந்து உருண்டு விழுந்தது ராட்சத பாறை
/
கிருஷ்ணகிரி மலையில் இருந்து உருண்டு விழுந்தது ராட்சத பாறை
கிருஷ்ணகிரி மலையில் இருந்து உருண்டு விழுந்தது ராட்சத பாறை
கிருஷ்ணகிரி மலையில் இருந்து உருண்டு விழுந்தது ராட்சத பாறை
ADDED : டிச 05, 2024 04:11 AM

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அடுத்த வெங்கடாபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பழையபேட்டை தம்புசாமி நகரில், கிருஷ்ணகிரி மலை அடிவாரத்தில், கிருஷ்ணகிரி நகராட்சி முன்னாள் துணைத்தலைவர் வெங்கடாசலம் வீடு உள்ளது.
மலையிலிருந்த, 100 டன்னுக்கும் அதிகமான எடையுள்ள ராட்சத பாறை நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு உருண்டு விழுந்தது. இதில், வெங்கடாசலம் வீட்டின் பின்பக்க சுற்றுச்சுவர் இடிந்தது. பாறை உருண்ட பகுதி, கிருஷ்ணகிரி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.
மலை அடிவாரத்தில் இருந்து, 300 மீட்டர் தொலைவில் குடியிருப்புகள் அமைய வேண்டும் என்ற விதிமுறை, அங்கு பின்பற்றப்படவில்லை.
மலையிலிருந்து வடியும் மழைநீர், அப்பகுதி ஓடைக்கு சென்று, பாப்பாரப்பட்டி ஏரியில் கலக்கும். அந்த ஓடை புறம்போக்கு பகுதி பெரும்பாலும் ஆக்கிரமிக்கப்பட்டு, வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
கிருஷ்ணகிரியில் கடந்த சில நாட்களாக பெய்த மழைநீர் வெளியேற வழியில்லாததால், ராட்சத பாறை உருண்டு விழுந்துள்ளது. இந்த பாறையை உடைத்தால், அதன் மேல்பகுதியிலுள்ள பாறைகளும் உருண்டு விழும் அபாயம் உள்ளது.
மேலும் வரும் நாட்களில், கிருஷ்ணகிரியில் மழை பொழியும் பட்சத்தில், இப்பகுதியில் பாறைகள் உருண்டு பெரிய விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.
பாறை உருண்ட பகுதியை அதிகாரிகள், கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் என அனைவரும் கண்காட்சியை பார்ப்பது போல், பார்த்து செல்கின்றனர்.