/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சானமாவு கிராம பகுதியில் சுற்றித்திரியும் ஒற்றை யானை
/
சானமாவு கிராம பகுதியில் சுற்றித்திரியும் ஒற்றை யானை
சானமாவு கிராம பகுதியில் சுற்றித்திரியும் ஒற்றை யானை
சானமாவு கிராம பகுதியில் சுற்றித்திரியும் ஒற்றை யானை
ADDED : டிச 13, 2025 05:38 AM
ஓசூர்: கர்நாடக மாநிலத்திலிருந்து இடம் பெயர்ந்த, 50க்கும் மேற்பட்ட யானைகள் தேன்கனிக்கோட்டை மற்றும் ஊடேதுர்க்கம் வனப்ப-குதியில் முகாமிட்டு சுற்றித் திரிகின்றன.
இந்நிலையில் நேற்று காலை காட்டு யானைகள் கூட்டத்தில் இருந்து பிரிந்த, ஒற்றை யானை ஓசூர் அருகே உள்ள சானமாவு கிராமத்தை ஒட்டியுள்ள கிராமங்களின் சாலையோரத்தில் சுற்றித்தி-ரிந்தது.
அப்போது சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொது-மக்கள் வாகனங்களை நிறுத்தி, தங்களது மொபைல்போன்களில் யானையை படம் பிடித்தனர். அதனை தொடர்ந்து, யானை அந்த பகுதியில் நீண்ட நேரம் சுற்றித்திரிந்து பின்னர் கிராமத்தை ஒட்டி உள்ள வனப்பகுதிக்குள் சென்றது. அசம்பாவிதம் நிகழும் முன், வனத்துறையினர் ஒற்றை யானையை அடர்ந்து வனப்பகு-திக்குள் விரட்ட வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

