sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஒன்வேயில் தவறாக நுழைந்த லாரி; ஸ்கூட்டர் மீது மோதி மூவர் பலி

/

ஒன்வேயில் தவறாக நுழைந்த லாரி; ஸ்கூட்டர் மீது மோதி மூவர் பலி

ஒன்வேயில் தவறாக நுழைந்த லாரி; ஸ்கூட்டர் மீது மோதி மூவர் பலி

ஒன்வேயில் தவறாக நுழைந்த லாரி; ஸ்கூட்டர் மீது மோதி மூவர் பலி


ADDED : அக் 12, 2024 12:04 AM

Google News

ADDED : அக் 12, 2024 12:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் போத்தாபுரம் அருகே, கிருஷ்ணகிரியில் இருந்து சென்னை நோக்கி, பல்வேறு பொருட்களை ஏற்றிச் சென்ற கன்டெய்னர் லாரி, தர்மபுரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, ஒன்வேயில் சென்றது.

அப்போது எதிரே, ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் மூன்று பேர் வந்தனர்.

கண்ணிமைக்கும் நேரத்தில், கன்டெய்னர் லாரி, ஸ்கூட்டர் மீது மோதி, பயங்கரமாக மோதியது அவர்கள் மீது ஏறிச் சென்றது. இதில், ஸ்கூட்டரில் சென்ற மூவரும் உடல் நசுங்கி பலியாகினர். காவேரிப்பட்டணம் போலீசார் சடலங்களை மீட்டனர்.

விசாரணையில், ஸ்கூட்டரில் வந்தவர்கள் தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே மாம்பட்டியைச் சேர்ந்த ராகுல், 20, நச்சினம்பட்டி வசந்தகுமார், 28, கணம்பட்டி விஜயகுமார், 25, என்பது தெரிய வந்துள்ளது.

இவர்கள் எதற்காக கிருஷ்ணகிரி நோக்கி வந்தனர் என்பது தெரியவில்லை.

கன்டெய்னர் லாரியை ஓட்டி வந்த, மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த அலெக்ஸாண்டர், 38, என்பவரை காவேரிப்பட்டண போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us