ADDED : நவ 04, 2024 06:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: கர்நாடகா மாநிலம், பெங்களூரு சோமசுந்தர பால்யா பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் மகன் நவீன்குமார், 26. இவர் தீபாவளி பண்டிகைக்கு, தேன்கனிக்கோட்டை அடுத்த உனிசெட்டி மலை கிராமத்திலுள்ள தன் சித்தி வீட்டிற்கு கடந்த சில நாட்களுக்கு முன் வந்தார். நேற்று மதியம், 2:30 மணிக்கு, அனுமந்தபுரத்தி-லுள்ள குட்டையில் உறவினர்களுடன் குளிக்க சென்றார்.
குட்-டையை சுற்றி நீச்சல் அடித்து கொண்டே சுற்றி வந்த நவீன்-குமார், நீரில் மூழ்கி பலியானார். தேன்கனிக்கோட்டை தீயணைப்-புத்துறையினர் நீண்ட நேரம் போராடி அவரது சடலத்தை மீட்-டனர். தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.