/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
உடைந்து விழும் நிலையில் வலுவிழந்த மின்கம்பம்
/
உடைந்து விழும் நிலையில் வலுவிழந்த மின்கம்பம்
ADDED : ஜூன் 12, 2025 01:34 AM
போச்சம்பள்ளி, மத்துார் அடுத்த, கவுண்டனுார் கிராமத்திற்கு செல்லும் சாலையோரம் சின்னவன் என்பவரின் விவசாய நிலத்தில் மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இக்கம்பத்திலுள்ள மின்கம்பிகள் மூலம் பல பகுதிகளுக்கு மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது. இக்கம்பத்தில், சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்த நிலையில், கம்பிகள் வெளியே தெரியும் நிலையில், கம்பம் மிகவும் வலுவிழந்து உடைந்து விழும் நிலையில் உள்ளது.
இது குறித்து, மின்வாரியத்திற்கு அப்பகுதி மக்கள் பலமுறை தகவல் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். ஏதேனும் பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன் மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுத்து, வலுவிழந்துள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.