/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
நடைபாதை கடை வியாபாரிகளிடம் சுங்கம் வசூலித்தால் நடவடிக்கை
/
நடைபாதை கடை வியாபாரிகளிடம் சுங்கம் வசூலித்தால் நடவடிக்கை
நடைபாதை கடை வியாபாரிகளிடம் சுங்கம் வசூலித்தால் நடவடிக்கை
நடைபாதை கடை வியாபாரிகளிடம் சுங்கம் வசூலித்தால் நடவடிக்கை
ADDED : அக் 04, 2024 01:24 AM
நடைபாதை கடை வியாபாரிகளிடம்
சுங்கம் வசூலித்தால் நடவடிக்கை
கிருஷ்ணகிரி, அக். 4-
ஓசூர் மாநகராட்சி, நடைபாதை கடை வியாபாரிகளிடம் சுங்கம் வசூலித்தால், நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, ஓசூர் மாநகராட்சி கமிஷனர் ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நடைபாதை கடைகளுக்கு சுங்கம் வசூலிக்கும் உரிமம் யாருக்கும் வழங்கவில்லை. முறைகேடாக சுங்க கட்டணம் வசூலிக்கும் நபர்கள் குறித்து, பொது மக்கள் ஓசூர் மாநகராட்சிக்கு, 04344 -247666 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இதுபோன்ற முறைகேட்டில் ஈடுபடும் நபர்கள் மீது, போலீஸ் துறை மூலம் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

