/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஒகேனக்கல்லில் 2 நாட்களுக்கு பின் மீண்டும் பரிசல் பயணம்
/
ஒகேனக்கல்லில் 2 நாட்களுக்கு பின் மீண்டும் பரிசல் பயணம்
ஒகேனக்கல்லில் 2 நாட்களுக்கு பின் மீண்டும் பரிசல் பயணம்
ஒகேனக்கல்லில் 2 நாட்களுக்கு பின் மீண்டும் பரிசல் பயணம்
ADDED : ஆக 15, 2024 07:08 AM
ஒகேனக்கல்: தென்மேற்கு பருவமழை தீவிரத்தால், கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பி உள்ளன.
நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பால் அணைகளின் பாதுகாப்பு கருதி, தமிழகத்திற்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம், கபினி அணையிலிருந்து வினாடிக்கு, 5,000 கன அடி, கே.ஆர்.எஸ்., அணையிலிருந்து, 14,512 கன அடி என மொத்தம், 19,512 கன அடி உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 24,000 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை, 6:00 மணிக்கு, 19,000 கன அடியாக சரிந்தது. நீர்வரத்து குறைந்த நிலையில், 2 நாட்களுக்கு பின் நேற்று, பரிசல் இயக்க தர்மபுரி மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. வெள்ளப்பெருக்கின் போது ஏற்பட்ட சேதங்களை சரிசெய்யாததால் தொடர்ந்து, 30வது நாளாக அருவியில் குளிக்க தடை தொடர்கிறது. இதனால், ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகளின் வருகையின்றி வெறிச்சோடியது.