sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்

/

அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்

அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்

அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்


ADDED : நவ 17, 2025 03:40 AM

Google News

ADDED : நவ 17, 2025 03:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, அ.தி.மு.க., சார்பில், ஓசூர் பாகலுார் ஹவுசிங் போர்டில் உள்ள கட்சி அலுவலகத்தில், பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

பகுதி செயலாளர்கள் வாசுதேவன், அசோகா தலைமை வகித்-தனர். மேற்கு மாவட்ட அவைத்தலைவர் நாராயணன், அண்ணா தொழிற்சங்க பேரவை மாவட்ட செயலாளர் சீனிவாசன் முன்-னிலை வகித்தனர். மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணாரெட்டி, தொகுதி பொறுப்பாளர் முன்னாள் எம்.எல்.ஏ., பன்னீர்செல்வம் ஆகியோர்,

ஆலோசனைகளை வழங்கி பேசினர்.

பாலகிருஷ்ணாரெட்டி பேசும் போது, ''டாஸ்மாக்கில், 40,000 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்துள்ளது. கரூரில் பாட்டி-லுக்கு, 10 ரூபாய் என பாட்டு படித்ததால், 40 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர். அப்படியென்றால் தமிழகத்தில் எந்த அள-விற்கு சட்டம், ஒழுங்கு கெட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த, 4 ஆண்டுகால, தி.மு.க., ஆட்சியில், 7,000 கொலைகள் நடந்துள்-ளன. அதிக கடன் வாங்கிய மாநிலம் தமிழகம்; டாஸ்மாக் மூலம் லாபத்தை அதிகப்படுத்தியது தமிழகம்,'' என்றார். சேலம் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் யாதவ் பிரபு, பிரசன்னகுமார் உட்பட பலர்

பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us