/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
/
அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
ADDED : ஜூலை 28, 2025 04:12 AM
கிருஷ்ணகிரி: 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற நிகழ்ச்சியில் பங்கேற்க, அ.தி.மு.க., பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வ-ருமான
பழனிசாமி அடுத்த மாதம், 12, 13ல் கிருஷ்ணகிரி மாவட்டத்-திற்கு வருகை தர உள்ளார். இதையொட்டி, கிருஷ்ணகிரியில் அமைப்பு சாரா ஓட்டுனர் அணி சார்பில், மாவட்ட
செயலாளர் ஆஜி தலைமையில், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்றம் சார்பில், துணைத்தலைவர் ஆறுமுகம் தலைமையில் நேற்று நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில், அ.தி.மு.க., பொதுச்செயலாளருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது. வரும், 2026ல் சட்டசபை தேர்தலில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை ஆகிய தொகுதிகளில்,
அ.தி.மு.க., துணை பொதுச் செயலாளர் முனுசாமி தலைமையில் வெற்றி பெற பாடுபட வேண்டும். வரும் தேர்தலில், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் ஆட்சியை, பழனிசாமி தலை-மையில் அமைக்க அயராது உழைக்க வேண்டும். தமிழத்தில் நடந்து வரும் கொலை, பாலியல் பலாத்காரம் ஆகியவற்றை தடுக்கத் தவறிய, தி.மு.க., அரசை கண்டிப்பது என்பது உள்-ளிட்ட தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன.
இதில், அமைப்புசாரா ஓட்டுனர் அணி நகர செயலாளர் ராஜ்-குமார், மாவட்ட இணை செயலாளர்கள் சிவகுமார், சின்னராஜ், எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட செயலாளர் தென்னரசு, நகர செய-லாளர் கேசவன், ஒன்றிய செயலாளர்கள் கண்ணியப்பன், சூர்யா உள்பட பலர் பங்கேற்றனர்.