/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அ.தி.மு.க., இலக்கிய அணி நிர்வாகிகள் ஆலோசனை
/
அ.தி.மு.க., இலக்கிய அணி நிர்வாகிகள் ஆலோசனை
ADDED : ஆக 01, 2025 01:18 AM
கிருஷ்ணகிரி, 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற நிகழ்ச்சியில் பங்கேற்க, அ.தி.மு.க., பொதுச் செயலாளர் இ.பி.எஸ்., அடுத்த மாதம் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். இதையொட்டி, கிருஷ்ணகிரியில், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமையில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இலக்கிய அணி நகர செயலாளர் கோவிந்தராஜ் வரவேற்றார்.
இதில், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தரும், அ.தி.மு.க., பொதுச் செயலாளருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது. 2026ல் சட்டசபை தேர்தலில், கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை ஆகிய, 3 தொகுதிகளில், அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி
தலைமையில், அதிக ஓட்டு வித்யாசத்தில் வெற்றி பெறவும், வரும் தேர்தலில், இ.பி.எஸ்., தலைமையில் ஆட்சி அமையவும் அயராது உழைக்க வேண்டும். தமிழகத்தில் நடக்கும் கொலை, பாலியல் பலாத்காரம் ஆகியவற்றை தடுக்க தவறிய, தி.மு.க., அரசை வன்மையாக கண்டிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நகர செயலாளர் கேசவன், இலக்கிய அணி மாவட்ட தலைவர் நந்தகுமார், மாவட்ட துணைத்தலைவர் குமரேசன், இணை செயலாளர் மாதவன், இலக்கிய அணி நகர செயலாளர் மணி உள்பட பலர் பங்கேற்றனர்.

