sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

/

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : செப் 13, 2024 07:01 AM

Google News

ADDED : செப் 13, 2024 07:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்தங்கரை: ஊத்தங்கரை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.

இதில், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை, அரசு ஊழியர்களாக அறிவித்து, கிரேடு 3, மற்றும் கிரேடு 4 அரசு ஊழியர்களாக முறைபடுத்தி குறைந்தபட்ச ஊதியமாக ஊழியர்களுக்கு, 26,000 ரூபாய்,- உதவியாளர்களுக்கு, 21,000- ரூபாய் வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணிக்கொடை தொகை, 10 லட்சம் ரூபாய், உதவியாளர்களுக்கு, 5 லட்சம் வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம், 9,000- ரூபாய் வழங்க வேண்டும். 10 ஆண்டு பணிமுடித்த அங்கன்வாடி ஊழியர்கள் அனைவருக்கும் மேற்பார்வையாளர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும். அல்லது பத்தாண்டு பணி முடித்தவுடன் மேற்பார்வையாளர்களுக்கான ஊதியம் வழங்கப்பட வேண்டும், என்பன உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கையை நிறைவேற்றக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், ஒன்றிய தலைவர் சித்ரா, மாவட்ட பொருளாளர் சுஜாதா, செயலாளர் பழனியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us