/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூர் மாநகராட்சி நியமன கவுன்சிலர் பதவிக்கு மனு
/
ஓசூர் மாநகராட்சி நியமன கவுன்சிலர் பதவிக்கு மனு
ADDED : ஜூலை 17, 2025 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன கவுன்சிலர் பதவி அளிக்க, அரசு உத்தரவிட்டுள்ளது. ஓசூர் மாநகராட்சி நியமன கவுன்சிலர் பதவிக்கு, 40 சதவீதத்திற்கு மேல் மாற்றுத்திறன் கொண்டவர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை, 3:00 மணிக்குள், விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஓசூர் மாநகராட்சி மாற்றுத்திறனாளிகளுக்கான நியமன கவுன்சிலர் பதவிக்கு, தமிழ்நாடு காதுகேளாதோர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ஜெய்சங்கர் நேற்று விருப்ப மனு தாக்கல் செய்தார். அதை, உதவி
கமிஷனர் டிட்டோ பெற்றுக்கொண்டார்.