/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ராகவேந்திரர் ஸ்வாமிகள் கோவிலில் ஆராதனை மஹோத்ஸவ விழா
/
ராகவேந்திரர் ஸ்வாமிகள் கோவிலில் ஆராதனை மஹோத்ஸவ விழா
ராகவேந்திரர் ஸ்வாமிகள் கோவிலில் ஆராதனை மஹோத்ஸவ விழா
ராகவேந்திரர் ஸ்வாமிகள் கோவிலில் ஆராதனை மஹோத்ஸவ விழா
ADDED : ஆக 21, 2024 06:16 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பழையபேட்டையிலுள்ள சீதாராம வீர ஆஞ்சநேய சமேத ராகவேந்திரர் சுவாமிகள் கோவிலில், 353வது ஆராதனை மஹோத்ஸவ விழா நேற்று துவங்கியது. நேற்று காலை, 8:00 மணிக்கு கோ பூஜை, 9:00 மணிக்கு ஆஞ்சநேயர் மற்றும் ராகவேந்திரர் சுவாமிக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து ராம நாம ஜெபம், வாசவி கான லஹரி குழுவினரின் பஜன் நிகழ்ச்சி, 12:00 மணிக்கு, ஸகஸ்ரநாம அர்ச்சனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று காலை, பஞ்சாமிர்த அபிஷேகம், ராம நாம ஜெபம், பஜனா மண்டலியினரின் பஜனை, ஸஹஸ்ர நாம அர்ச்சனை, மாலை, 7:00 மணிக்கு, ராகவேந்திரர் ஸ்வாமிகளின் திருவீதி உலா நடக்கிறது. நாளை காலை, பஞ்சாமிர்த அபிஷேகம், ராம நாம ஜெபம், தும்கூர் மருத் ஆச்சாரின் உபன்யாசம், ஸஹஸ்ர நாம அர்ச்சனை நடக்கிறது.

