sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மஹாபாரத திருவிழாவில் அர்சுணன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி

/

மஹாபாரத திருவிழாவில் அர்சுணன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி

மஹாபாரத திருவிழாவில் அர்சுணன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி

மஹாபாரத திருவிழாவில் அர்சுணன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி


ADDED : மே 09, 2024 06:11 AM

Google News

ADDED : மே 09, 2024 06:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி : திரவுபதி அம்மன் கோவில், மஹாபாரத திருவிழாவையொட்டி, அர்சுணன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலுகா முருக்கம்பள்ளம் திரவுபதி அம்மன் கோவில், 50ம் ஆண்டு மஹாபாரத திருவிழா கடந்த மாதம், 24ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது.இதில், 29ம் தேதி முதல், 13 நாட்கள் தெருக்கூத்து நாடகம் நடக்கிறது. இதில், கிருஷ்ணன் பிறப்பு நாடகம், அம்பாள் திருக்கல்யாணம், பாண்டவர் பிறப்பு, அரக்கு மாளிகை, பக்காசூரனுக்கு சோறு எடுத்தல், வில் வலைப்பு, திரவுபதி அம்மனுக்கு திருக்கல்யாணம், சுபத்திரை கல்யாணம், காண்டவன தகனம், சராசந்திரன் சண்டை, துயில், சித்திரசேனன் சண்டை, அரவான் சாபம் ஆகிய நாடகங்கள் நடந்து வந்தன.

நேற்று, அர்சுணன் தபசு மரம் ஏறும் நாடகம் நடந்தது. இதில், கவுரவர்களை கூண்டோடு அழிக்க, சிவப்பெருமானிடம் பாசுபதம் என்ற ஆயுதம் பெற, அர்சுணன் கோவில் முன்பு அமைத்திருந்த தபசு மரத்தின் கீழ், சிவப்பெருமானுக்கு காட்டு மலர்களை கொண்டு சிறப்பு பூஜை செய்த பின் தபசு மரத்தில் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. இரவு துவங்கி விடிய, விடிய நடந்த இந்த நாடகத்தை, பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டதுடன், அர்சுணன் தபசு நாடகத்தையும் கண்டு களித்தனர். இவ்விழா ஏற்பாடுகளை, 8 கிராமங்களை சேர்ந்த தர்மகர்த்தாக்கள் செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us