/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பாண்டுரங்க சுவாமி கோவிலில் ஆஷாட ஏகாதசி உற்சவம்
/
பாண்டுரங்க சுவாமி கோவிலில் ஆஷாட ஏகாதசி உற்சவம்
ADDED : ஜூலை 07, 2025 03:38 AM
ஓசூர்: ஓசூரிலுள்ள பழைய கிருஷ்ணகிரி சாலையில், பாண்டுரங்க சுவாமி கோவில் உள்ளது. இங்கு, ஆஷாட ஏகாதசி மற்றும் பல்-லக்கு வீதி உலா
உற்சவம் நேற்று துவங்கியது.
அதிகாலை, 5:00 மணிக்கு காகட ஆரத்தி, மாலை, 4:00 மணிக்கு பரத நாட்டியம், கலை
நிகழ்ச்சிகள், இரவு, 7:00 மணிக்கு சிறப்பு பஜனை, 8:00 மணிக்கு மகா மங்களாரத்தி, பிரசாத வினியோகம் நடந்தன. விழாவில் இன்று (ஜூலை 7) காலை, 6:00 மணிக்கு சிறப்பு பூஜை, மாலை, 6:00 மணிக்கு உற்சவ மூர்த்தி வீதி உலா நடக்கி-றது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
ஓசூர், முனீஸ்வர் நகர் ரிங்ரோட்டிலுள்ள விஜய விநாயகர் சத்சங்-கத்தில், ஆஷாட
ஏகாதசி மகோத்சவம் நேற்று நடந்தது. காலை, 6:00 மணிக்கு, சிறப்பு பூஜை, பஜனைகள்,
6:30 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாமம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்-சிகள் நடந்தன.