sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

குடித்த 'டீ'க்கு பணம் கேட்டதால் தாக்குதல்; 6 பேருக்கு 'காப்பு'

/

குடித்த 'டீ'க்கு பணம் கேட்டதால் தாக்குதல்; 6 பேருக்கு 'காப்பு'

குடித்த 'டீ'க்கு பணம் கேட்டதால் தாக்குதல்; 6 பேருக்கு 'காப்பு'

குடித்த 'டீ'க்கு பணம் கேட்டதால் தாக்குதல்; 6 பேருக்கு 'காப்பு'


ADDED : அக் 18, 2024 02:57 AM

Google News

ADDED : அக் 18, 2024 02:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குடித்த 'டீ'க்கு பணம் கேட்டதால்

தாக்குதல்; 6 பேருக்கு 'காப்பு'

ஓசூர், அக். 18-

ஓசூர் அடுத்த ஒன்னல்வாடியை சேர்ந்தவர் நாராயணசாமி, 53. அப்பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். அவரது கடையை ஒட்டி ஆனந்த் என்பவர் டீ கடை நடத்தி வருகிறார். அவரது கடைக்கு நேற்று முன்தினம் இரவு, ஓசூர் அடுத்த சென்னத்துாரை சேர்ந்த ஹரிஷ்குமார், 32 என்பவர், சிலருடன் வந்து, டீ, ஸ்நாக்ஸ் உள்ளிட்டவைகளை வாங்கினார். ஆனால் அதற்கு சரியான தொகையை வழங்கவில்லை. இதை, டீக்கடை ஊழியர் அஞ்சப்பா கேட்டுள்ளார். 'எங்களிடமே பணம் கேட்டு மிரட்டுகிறீர்களா' எனக்கூறி அஞ்சப்பா, ஆனந்த் இருவரையும், ஹரிஷ்குமார் தரப்பினர் தாக்கினர்.

இதை தட்டிக்கேட்ட மளிகை கடைக்காரர் நாரயணசாமியை, அருகிலிருந்த சிறிய சிலிண்டரால் தாக்கியதில் படுகாயமடைந்த நாராயணசாமி, ஓசூர் ஜி.ஹெச்.,ல் சிகிச்சை பெற்றார். அவர் புகார் படி, ஓசூர் டவுன் போலீசார், ஹரிஷ்குமார், சந்தோஷ், 28, தருண், 22, மற்றும், 18 வயதுடைய மூவர் உட்பட, 6 பேரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us