sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 18, 2025 ,ஐப்பசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

காவிரியாற்றில் மூழ்கி ஆட்டோ டிரைவர் பலி

/

காவிரியாற்றில் மூழ்கி ஆட்டோ டிரைவர் பலி

காவிரியாற்றில் மூழ்கி ஆட்டோ டிரைவர் பலி

காவிரியாற்றில் மூழ்கி ஆட்டோ டிரைவர் பலி


ADDED : அக் 18, 2025 01:07 AM

Google News

ADDED : அக் 18, 2025 01:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒகேனக்கல், சென்னை, ஆர்.கே.நகர், தண்டாரப்பேட்டை பகுதியை சேர்ந்த சாமிநாதன் மகன் பிரபு,38. இவர், ஆட்டோ டிரைவராக வேலை செய்து வந்தார்.

நேற்று தனது நண்பர்கள், பத்து பேருடன் காரில் ஒகேனக்கலுக்கு சுற்றுலா வந்தார். ஒகேனக்கலில், பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தனர். நண்பகல், 1:00 மணியளவில் நண்பர்களுடன் கோத்திக்கல் காவிரி ஆற்றில் குளித்தனர். அப்போது பிரபு ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். நீச்சல் தெரியாததால் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.

உடனடியாக நண்பர்கள் ஒகேனக்கல் போலீசார் மற்றும் தீயணைப்பு மீட்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர், பரிசல் ஓட்டிகள் உதவியோடு ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பிரபுவை சடலமாக அதே இடத்தில் மீட்டனர். ஒகேனக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இறந்த பிரபுவிற்கு கல்பனா என்ற மனைவியும், 2 மகள்கள் உள்ளனர்.






      Dinamalar
      Follow us