/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பால் குளிக்க தடை
/
ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பால் குளிக்க தடை
ADDED : ஜூலை 27, 2025 01:38 AM
ஒகேனக்கல் :ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து, நேற்று மாலை வினாடிக்கு, 32,000 கன அடியாக அதிகரித்ததை அடுத்து, ஆற்றில் குளிக்க, தர்மபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
கேரளா, கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரத்தால், கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, அங்குள்ள கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளிலிருந்து, காவிரியாற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு, 18,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை, 5:00 மணிக்கு, 32,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால், ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, மெயின் பால்ஸ், ஐந்தருவி, ஐவர்பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மெயின் பால்ஸ்க்கு செல்லும் நடைபாதை மீது தண்ணீர் பாய்ந்தோடுவதால், இரும்பு கேட் மூடி வைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆற்றில் குளிக்க, தர்மபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. கேரளா நீர்பிடிப்பு பகுதிகளில் மழை தொடர்வதால், ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு, 75,000 கன அடி வரை தண்ணீர் வர வாய்ப்புள்ளதாக, மத்திய நீர்வளத்துறை
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.