sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மழையால் ஓசூரில் துவங்கிய குளிர் சூடு பிடித்துள்ள போர்வை விற்பனை

/

மழையால் ஓசூரில் துவங்கிய குளிர் சூடு பிடித்துள்ள போர்வை விற்பனை

மழையால் ஓசூரில் துவங்கிய குளிர் சூடு பிடித்துள்ள போர்வை விற்பனை

மழையால் ஓசூரில் துவங்கிய குளிர் சூடு பிடித்துள்ள போர்வை விற்பனை


ADDED : அக் 31, 2025 12:40 AM

Google News

ADDED : அக் 31, 2025 12:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர், ஓசூர் பகுதியில் குளிரின் தாக்கம் துவங்கியுள்ள நிலையில், போர்வை விற்பனையில் வட மாநில வாலிபர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக எல்லையான ஓசூரில் ஆண்டுதோறும் நவ., டிச., மாதங்களில் குளிரின் தாக்கம் அதிகமாக இருக்கும். நடப்பாண்டில் கடந்த இரு மாதமாக விட்டு, விட்டு மழை பெய்துள்ளதால், குளிரின் தாக்கம் முன்கூட்டியே துவங்கி விட்டது. இரவில் கடும் குளிர் நிலவுகிறது. காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால், இருசக்கர வாகனங்களில் செல்லும் போது, குளிரின் தாக்கத்தை அதிகமாக உணர முடிகிறது.

குளிர் காரணமாக இரவில் துாங்குவது சிரமத்தை ஏற்படுத்துகிறது. அதனால் குளிரை தாங்கும் வகையிலான போர்வைகள் விற்பனை தற்போது அதிகரித்துள்ளது. ஓசூரிலுள்ள தளி ஜங்ஷன் மேம்பாலத்திற்கு அடியில், சர்வீஸ் சாலை மற்றும் ராயக்கோட்டை சாலையோரம் உட்பட பல இடங்களில் குடில் அமைத்து, ஹரியானா மாநிலம், பானிபட் பகுதியிலிருந்து குளிர் தாங்கும் பெட்சீட்டுகள், படுக்கை விரிப்புகளை வாங்கி வந்து, வட மாநில இளைஞர்கள் விற்கின்றனர். இது தவிர ஸ்வெட்டர், ரெயின் கோர்ட் போன்றவற்றையும் விற்பனை

செய்கின்றனர்.

இது குறித்து, வட மாநில இளைஞர்கள் கூறும்போது, 'ஒருவர் போர்த்தி படுக்கும் பெட்சீட்டுகள், 175 முதல், 750 ரூபாய் வரை விலையிலும், இருவர் போர்த்தி படுக்கும் பெட்சீட்டுகள், 1,000 ரூபாய் வரையும், விற்பனை செய்கிறோம். இன்னும் இரு மாதங்களுக்கு விற்பனை நன்றாக இருக்கும்' என்றனர்.






      Dinamalar
      Follow us