ADDED : ஆக 26, 2026 05:45 AM
அ நிறம் | அளவு
ஊத்தங்கரை; கிருஷ்ணகிரி மாவட் டம், ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் சிறப்பு ரத்த தான முகாம் நேற்று நடந்தது. அரசு பாலிடெக்னிக் கல்-லுாரி முதல்வர் விஜயன் தலைமை வகித்தார்.
கிரீன் பொன்மலை டிரஸ்ட் மற்றும் ஊத்தங்-கரை நண்பர்கள் அரிமா சங்கம் ஆகிய அமைப்-புகள் இணைந்து நடத்திய முகாமில், கல்லுாரி மாணவ, -மாணவியர் மற்றும் பேராசிரியர்கள் ரத்த தானம் அளித்தனர். முகாமில் சேகரிக்கப்-பட்ட, 50 யூனிட் ரத்தம் கிருஷ்ணகிரி அரசு மருத்-துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டது. ஏற்பாடுகளை கல்லுாரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் சக்திவேல் செய்திருந்தார்.
