/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
போச்சம்பள்ளி வாரச்சந்தை ஆடுகள் வரத்தின்றி 'வெறிச்'
/
போச்சம்பள்ளி வாரச்சந்தை ஆடுகள் வரத்தின்றி 'வெறிச்'
போச்சம்பள்ளி வாரச்சந்தை ஆடுகள் வரத்தின்றி 'வெறிச்'
போச்சம்பள்ளி வாரச்சந்தை ஆடுகள் வரத்தின்றி 'வெறிச்'
ADDED : செப் 23, 2024 03:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி
யில், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வாரச்சந்தை கூடுவது வழக்கம். ஒவ்வொரு வாரமும், 3,000 முதல், 5,000க்கும் மேற்-பட்ட ஆடுகளை, சுற்று வட்டார மாவட்டங்களிலிருந்தும், கிரா-மங்களிலிருந்தும் விவசாயிகள், வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டு வருவர்.
இந்நிலையில் புரட்டாசி மாதம் என்பதால், அசைவ பிரியர்கள் ஆட்டிறைச்சி மீது, ஆர்வம் காட்டமாட்-டார்கள் எனக்கருதி விவசாயிகள், வியாபாரிகள், 500க்கும் குறை-வான ஆடுகளையே விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதனால், போச்சம்பள்ளி ஆட்டுச்சந்தை வெறிச்சோடியது.