ADDED : ஜூலை 18, 2025 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், ஓசூர் அருகே, கெலமங்கலம் செல்லும் ரயில் தண்டவாளத்தில், உடல் சிதைந்த நிலையில், நேற்று காலை, 7:30 மணிக்கு, 35 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் கிடந்தது.
அவர் யார் என்ற விபரம் தெரியவில்லை. தண்டவாளத்தை அஜாக்கிரதையாக கடந்தபோது இறந்திருக்கலாம் என, தெரிகிறது. சடலத்தை மீட்டு, ஓசூர் ரயில்வே போலீஸ் எஸ்.ஐ., ஸ்ரீதரன் விசாரித்து வருகிறார்.

